1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 3 டிசம்பர் 2014 (18:12 IST)

பந்துவீச்சில் சர்ச்சை: மறுபரிசோதனைக்கு அஜ்மல் தயார்

சந்தேகத்திற்குரிய வகையில் பந்துவீசியதன் காரணமாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐ.சி.சி நடத்தும் மறுபரிசோதனைக்கு சயீத் அஜ்மல் தயாராகவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அஜ்மல் பந்து வீச்சு மீது சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து நடந்த சோதனையில் அஜ்மல், விதிமுறைகளை மீறி பந்துவீசுவதாக கண்டு அறியப்பட்டு,அஜ்மலுக்கு ஐ.சி.சி. தடை விதித்தது.
 
பின்னர் பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீரர் சக்லைன் முஸ்தாக் மூலம் அஜ்மலின் பந்து வீசும் முறையை மாற்றினர். இந்நிலையில் ஐ.சி.சி நடத்தும் மறுபரிசோதனை முடிவுக்கு அஜ்மல் தயாராகவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.