1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (21:29 IST)

இந்தியா வெற்றி பெற 286 ரன்கள் இலக்கு

நியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 285 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.


 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இன்று 3வது ஒருநாள் போட்டி நடைப்பெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.4 ஓவரில் 285 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. 
 
இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த போட்டியில் 286 ரன்கள் இலக்கை நோக்கி கடுமையான போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.