1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (09:48 IST)

சம்பளத்துக்காக வரலை.. காசு வாங்க மறுத்த தோனி! – நெகிழ்ந்து போன கங்குலி!

இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட எம்.எஸ்.தோனி பணம் வாங்க மறுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்ததும் உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு ஆலோசகராக செயலாற்றும்படி தோனியிடம் கேட்கப்பட்ட நிலையில் தோனி அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் இதற்காக தனக்கு பணம் எதுவும் வேண்டாம் என வாங்க மறுத்துள்ளார். இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.