வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 10 மே 2017 (15:06 IST)

நல்லா வளைக்கிறாங்க: ஊடகங்களை வம்பிழுத்த சேவாக்!

நல்லா வளைக்கிறாங்க: ஊடகங்களை வம்பிழுத்த சேவாக்!

நேற்று நடந்த வாழ்வா சாவா போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி தனது துல்லியமான பந்துவீச்சால் கொல்கத்தா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை ருசித்தது.


 
 
இதனையடுத்து பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் மீடியாக்களை வம்பிழுக்கும் விதமாக கூறியிருந்தார்.

 
பொதுவாக டுவிட்டரில் கொஞ்சம் நக்கலாக டுவீட் செய்யும் சேவாக் அதிகப்படியான நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணியின் வெற்றி குறித்து டுவீட் செய்த அவர், சிறந்த வெற்றியை கொடுத்த வீரர்களை நினைத்தால் உண்மையாகவே பெருமையாக இருக்கிறது. சில மீடியாக்காரகள் வளைப்பதை விட எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்தை நன்றாக வளைத்தார்கள் என்றார்.