வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 6 ஜூன் 2015 (10:11 IST)

இந்திய நடுவர்களை மேம்படுத்தியது ஐபிஎல் தொடர்: சுந்தரம் ரவி

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்திய நடுவர்களை மேம்படுத்தியுள்ளது என்று சுந்தரம் ரவி கூறியுள்ளார்.
2015-2016 ஆம் ஆண்டிற்கான ஐசிசி எலைட் பேனல் நடுவர் குழு பட்டியலில் இந்திய நடுவரான சுந்தரம் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் ஆண்டுதோறும் 12 பேர் இடம் பெற்றிருப்பார்கள். மேலும் ஆண்டுதோறும் நடுவர்களின் செயலை தொடர்ந்து இக்குழு மீண்டும் சீரமைக்கப்படும். 
 
இந்நிலையில் இதுகுறித்து சுந்தரம் ரவி கூறுகையில், ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்திய நடுவர்களை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர்களால் பிறநாட்டு நடுவர்களுடன் சேர்ந்து பணிபுரிய முடிகிறது. இவ்வாறு ஒரு சேர கருத்துகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் நடுவர்களின் தரம் மேம்பட்டு காணப்படுகிறது என்றார்.