வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (14:02 IST)

”தோனியை போல் ஒரு வீரரை மிஸ் செய்கிறோம்..” மனம் திறக்கும் குல்தீப் யாதவ்

தோனிக்கு அனுபவம் மிகவும் அதிகம், அவரை இந்திய அணி மிஸ் செய்கிறது என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி, 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமாகிய தோனி பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொள்ளாத நிலையில், இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், “விக்கெட் கீப்பரில் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தோனியின் அனுபவத்தை இந்திய அணி மிஸ் செய்து வருகிறது. அவர் அனுபவம் மிகப் பெரியது. அவர் இந்திய அணிக்கு நிறைய கொடுத்திருக்கிறார். அது போன்ற ஒரு வீரர் நிச்சயமாக விளையாடாதபோது நீங்கள் அவர் இல்லாததை உணர்வீர்கள்” என மனம் திறந்து கூறியுள்ளார்.