வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (17:47 IST)

மைதானத்தில் தோனியை கடுப்பேற்றிய டிஜே

இந்தியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 2வது போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் நேற்று தோனி ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது மைதானத்தில் இருந்த டிஜே கடுப்பேற்றியதால் தோனி பயிற்சியை பாதியில் முடித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மைதானதில் மியுசிக் டிஸ்க் ஜாக்கி ஸ்பீக்கரில் அதிக சவுண்டுடன் மியூசிக் போட்டுக்கொண்டிருந்தார். இது தோனியின் பயிற்சிக்கு இடையூறாக இருந்தது. 
 
இதனால் தோனி மியூசிக்கை நிறுத்தக்கூறினார். இது டிஸ்க் ஜாக்கிக்கு தகவல் சரியாக சென்று சேரவில்லை. இதனால் அவர் மியூசிக்கை நிறுத்தவில்லை. இதனால் கடுப்பான தோனி பயிற்சியை பாதியில் முடித்துக்கொண்டு மைதானத்தில் இருந்து சென்றுவிட்டார்.
 
ஜாக்கி டிஜே ஸ்பீக்கர் சரியாக வேலை செய்கிறதா  என்று பார்த்துக்கொண்டிருந்தாக மைதானத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர் மேலும், அவர் சில மணி நேரத்தில் மியூசிக்கை நிறுத்திவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
 
இந்நிலையில், இந்திய அணி இதுகுறித்து ஒடிசா கிரிக்கெட் சங்கத்திடம் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை’’ என்று அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்
 
ஒடிசா கிரிக்கெட் சங்க தலைவர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில் ‘‘உலகில் கிரிக்கெட் விளையாட்டு முக்கியமான ஒன்றாகிவிட்டது. அதேசமயம் மைதானத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த இதுபோன்ற டி ஜே மியூசிக் அமைப்பது வாடிக்கையான ஒன்றாகும். என்று அவர் கூறினார்.