வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (18:10 IST)

இந்திய அணி அபாரம்; 99 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி 20 போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் குவித்துள்ளது.
 

 
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய தோற்ற நிலையில், ஹரேரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிபாபா மற்றும் மசகட்ஸா இருவரும் தலா 10 ரன்கள் எடுத்து சரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சிக்கந்தர் ரஸா 1 ரன்னிலும், முடோம்போட்சி ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். இதனால், 28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
 
பின்னர் பீட்டர் மோர் மற்றும் மால்கம் வால்லர் இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை மெதுவாக உயர்த்தினர். வால்லர் 14 ரன்னிலும், மோர் 31 ரன்னிலும் வெளியேறினர். இருவரும் இணைந்து 29 ரன்கள் குவித்தனர்.
 
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் சரண் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.