1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (11:43 IST)

11 வது உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும்: ரிக்கிபாண்டிங் நம்பிக்கை

வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என ரிக்கிபாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறுகையில்,  வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்றார். மேலும், இரு அணிகளும் பேட்டிங்கில் வலுவாக இருப்பதால் இவ்விரு அணிகளும் விளையாடுவதைக்காண மிகச்சிறப்பாக இருக்கும். 
 
எனினும் இதில் ஆஸ்திரேலிய அணியே கோப்பையை வெல்லும் என்பது எனது கணிப்பாகும். ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் வரும் உலக கோப்பை தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன் என்றார்.