1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Geetha priya
Last Modified: திங்கள், 23 ஜூன் 2014 (16:29 IST)

டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றது

இங்கிலாந்தில் ஐந்து போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு புறப்பட்டுச்சென்றது.
 
நாட்டிங்க்ஹாமில் ஜுலை 9 ஆம் தேதி துவங்கும் இத்தொடர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடையுமென தெரிகிறது. 
 
டெஸ்ட் தொடர் முடிவடைந்தப் பிறகு ஐந்து ஒருநாள் போட்டிகளும், சர்வதேச டி20 போட்டியும் நடைபெறுமென தெரிகிறது. 
 
இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், தோனி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான்,கௌதம் கம்பீர், செடேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரஹானே அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் ஆவர்.