விடுகதைக்கு விடை தெரியுமா குழந்தைகளே?
கீழே கொடுக்கப்பட்டுள்ள விடுகதைக்கு விடை தெரியுமா பாருங்கள். இல்லையென்றால் கவலை வேண்டாம். அடுத்த பக்கத்தில் விடைகள் உள்ளன. படித்துவிட்டு உங்கள் நண்பர்களை கேட்டு அசத்துங்கள்.1.
அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?2.
காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?3.
காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?4.
தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?5.
சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?6.
காற்றிலே பறக்கும் கண்ணாடி குண்டு, தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன?7.
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?8.
ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?9.
பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?10.
நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?பதில்கள் அடுத்த பக்கத்தில்.
பதில்கள் 1.
வாழைப்பூ2.
பேனா3.
நாவல் பழம்4.
தேங்காய்5.
காய்ந்த மிளகாய்6.
நீர்க்குமிழி7.
விரல்கள்8.
பம்பரம்9.
கிளி10.
பூனை