வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்...!

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதேயாகும். அதனால் மூளை சரியாக எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிரக்கும் குழந்தைகள் கிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள்  வயிர்றில் இருக்கும்போது மூளை தொடர்பான எஓய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
 
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக உள்ளது. பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக பொரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மர்றும் வைட்டமின் ‘டி’ உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது, நரம்புத்தசை  மண்டலத்தை நன்கு இயக்குவதோடு, மூளை செல்களையும் நன்கு செயற்பட வைக்கிறது.
 
முலையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களில் மிக்கியமானது தான் ‘கோலைன்’ சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில்  உள்ள வைட்டமின் ‘டி’ அறிவுத்திறனை அதிகரிக்கும்.
 
வைட்டமின் ”பி” மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக  இருக்கும்.
 
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசளைக் கீரை, பீட்ரூட் போன்றவற்றை உண்பதால் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், இதில் இருக்கும் விற்றமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடல்  ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.