வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 2 டிசம்பர் 2014 (19:25 IST)

விபச்சாரத்தில் கைதான நடிகையின் புதிய வேலை

சமீபத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசுக்கு ஸ்கிரிப்ட் கன்சல்டண்ட் என்ற புதிய பதவி கிடைத்துள்ளது.


 
 
இயக்குனர் அனுராக் காஷ்யபும் அவரது மூன்று நண்பர்களும் இணைந்து பான்டம் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதில் ஸ்கிரிப்ட் கன்சல்டன்டாக ஸ்வேதா பாசுவை நியமித்திருக்கிறார்கள்.
 
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து தேசிய விருது பெற்ற ஸ்வேதா பாசு காசுக்காக விபச்சாரத்தில் ஈடுபட நேர்ந்ததை திரையுலகம் கருணையுடன் அணுகியது அவரது அதிர்ஷ்டம். பலரும் அவருக்கு நடிக்க வாய்ப்புதர முன்வந்த நிலையில் இந்த புதிய பதவி அவருக்கு கிடைத்திருக்கிறது.
 
வாழ்த்துகள்.