வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 19 ஜனவரி 2015 (15:03 IST)

பொறாமையில் பொசுங்குகிறாரா தீபிகா படுகோன்...?

லண்டனில் நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை கத்ரினா கைப் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்ததாக பாலிவுட்டில் ஒரு வதந்தி வளைய வருகிறது. விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்.

ஆனால், இதைவிட சுவாரஸியமான சில விஷயங்கள் இருக்கின்றன. அது ரன்பீரின் முன்னாள் காதலி தீபிகா படுகோனின் ரியாக்ஷன்.
 
ரன்பீரை முதல்முதலில் உயிருக்கு உயிராக(?) காதலித்தவர் தீபிகா படுகோன். ரன்பீரும்தான். கடைசியில் எல்லா காதலையும் போல அது ஒருநாள், முன்னாள் காதலாக மாறியது. அந்த நேரம் கரண் ஜோஹரின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபிகா, ரன்பீருக்கு எதை பரிசளிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, காண்டம் என்று பதிலளித்தார். அந்த பதில், அதே நொடியில் ரன்பீரை ஒரு வுமனைசராக காட்டியது. ரன்பீரின் குடும்பமே அந்த கமெண்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
 
அதன் பிறகு ரன்பீர் கத்ரினாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் வெளிநாடு சென்று தனியார் பீச்சில் விடுமுறையை கொண்டாடினர். பிகினியில் அவர்களின் கடற்கரை குளியல் காட்சிகள் பத்திரிகைகளில் வெளியாயின. இருவரும் திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வர ஆரம்பித்ததும், ரன்பீரை திருமணம் செய்யாதே என்று கத்ரினாவுக்கு அறிவுரை கூறினார் தீபிகா படுகோன். ரகசியமாக இல்லை, பகிரங்கமாக.
 
ஆனால், அதையெல்லாம் கேட்கிற நிலையில் கத்ரினா இல்லை என்பது ஒருபுறம் இருக்க, ஏன் தீபிகா இப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அனைவரையும் துரத்துகிற கேள்வி. முன்னாள் காதலியை ரன்பீர் - கத்ரினா காதல் பொறாமைக் கொள்ளச் செய்கிறதா?