வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : சனி, 16 ஏப்ரல் 2016 (12:28 IST)

பாலிவுட் நடிகர் திலிப் குமார் கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் அனுமதி

பாலிவுட் நடிகர் திலிப் குமார் கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் அனுமதி

தீலீப் குமார் இந்தியத் திரைப்பட நடிகரும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாவார். மும்பையில் பாந்த்ரா புறநகர்ப்பகுதியில் பாலி குன்றில் அவர் வசித்து வருகின்றார்.


 
 
தனது திரையுலக வாழ்க்கையை 1944ல் தொடங்கிய, குமார் ஒருசில வியாபாரரீதியில் வெற்றிபெற்ற திரைப்படங்களில் பிந்திய 1940கள், 1950கள், 1960கள், மற்றும் 1980-களில் நடித்துள்ளார். அவர்தான் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற முதல் நடிகராவார் மற்றும் பிலிம்பேர் விருதுகள் அந்த வகையில் பன்முறை வாங்கிய சாதனையும் புரிந்துள்ளார்.
 
அவர் பரவலாகப் பலவகையான பாத்திரங்களில் அதாவது ரொமாண்டிக் புத்தார்வக்காதல் அண்டாஸ் (1949), முரட்டு அடியாள் ஆன் (1952), நாடக ரீதியில் தேவதாஸ் (1955), நகைச்சுவையில் ஆஜாத் (1955), சரித்திரக் காதல் முகல் ஏ ஆஜாம் (1960) மற்றும் சமூக கங்கா ஜமுனா (1961) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
1970களில் கதாபாத்திரங்கள் வறண்ட நிலையை உருவாக்கியதால் அவர் 1976ல் திரைத்துறையை விட்டு வெளியேறி ஐந்தாண்டு இடைவெளி எடுத்துக்கொள்ள நேர்ந்தது. 1981ல் அவர் மீண்டும் திரும்பி கிராந்தி எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் குணசித்திரப்பாத்திரம் ஏற்று நடித்தார் மற்றும் தொடர்ந்து மையக்குணச்சித்திர பாத்திரங்களில் அதாவது ஷக்தி (1982), கர்மா (1986) மற்றும் சௌடாகார் (1991) மற்றும் அவரது கடைசிப்படமான க்யிலாவில் 1998ல் நடித்தார்.
 
இவர், தனது இரண்டாவது மனைவி சாய்ரா பானுவுடன் மும்பையில் வசித்து வருகிறார். நேற்றிரவு திடீரென்று சளி, கபம் சார்ந்த காரணங்களால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள திலிப் குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 
இருப்பினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.