வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 28 ஜூன் 2015 (07:56 IST)

சௌத்ல எல்லோருமே அப்படித்தான் - சபாஷ் போடவைத்த ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் வடஇந்திய இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.


 

 
குத்தாமல் குடையாமல் மரியாதையுடன் ஒரு தமிழ் கலைஞனை அவர்கள் பேட்டி எடுக்கிறார்கள் என்றால், அது ரஹ்மான் மட்டும்தான். அவர்களின் கர்வத்தைத் தாண்டிய கௌரவத்தை சர்வதேச அளவில் ரஹ்மான் பெற்றிருப்பதால் வந்த பணிவாக இருக்கலாம்.
 
பேட்டியில், ரஹ்மானின் எளிமை மற்றும் பணிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ரஹ்மான் சொன்ன பதில் யாரையும் சபாஷ் போட வைக்கும். தன்னை குறித்த அந்தக் கேள்விக்கு தென்னிந்திய கலைஞர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பதிலை தெரிவித்தார். எப்படி?
 
தென்னிந்திய கலைஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இந்த குணங்களை (பணிவு, எளிமை) கொண்டிருப்பதாக நினைக்கிறேன் என்றார். 
 
தென்னிந்திய கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நற்குணங்கள் சொந்தம் என்று கூறவும் ஒரு பரந்த மனம் வேண்டும்.
 
ரஹ்மானின் வெற்றியில் அவரது இந்த மனவிசாலத்துக்கும் முக்கிய பங்கு உண்டு.