1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 29 மே 2017 (16:59 IST)

பிரபல பாலிவுட் கதாநாயகிக்கு மருத்துவமனையில் நேர்ந்த கொடூரம்

பாலிவுட் படங்களில் நடித்த பழம் பெரும் நடிகை கீதா கபூரை அவரது மகன் மருத்துவமனையில் சேர்ந்து விட்டு சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பாலிவுட்டின் பழம் பெரும் நடிகை கீதா கபூர் பகீஷா என்ற திரைப்படம் மூலம் பிரபலமானவர். இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த மாதம் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல் நலக்குறைவு காரணமாக கீதா கபூரை அவரது மகன் அனுமதித்துள்ளார்.
 
மருத்துவமனையில் பணம் கட்டும்படி கூறியுள்ளனர். ஏடிஎம் சென்று வருகிறேன் என கூறி சென்ற அவரது மகன் அதன் பிறகு மருத்துவமனை பக்கம் செல்லவில்லையாம். தற்போது மருத்துவமனையில் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.1.5 லட்சத்தை தாண்டிவிட்டதாம். 
 
ஆரம்பத்தில் மருத்துவமனையில் அவர் யாரென்று தெரியாமல் இருந்துள்ளது. பின் விசாரித்தபோது அவர் பாலிவுட்டின் பழம் பெரும் நடிகை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கீதா கபூர் கூறியதாவது:-
 
என் மகன் என்னை முதியோர் இல்லத்திற்கு போக சென்னான். நான் அங்கு செல்ல விரும்பவில்லை. இதனால் வேண்டுமென்ற என்னை பசியுடன் வைத்து இருந்தான். நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பாடு போட்டான். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும், என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஓடி விட்டான், என கூறினார்.