நினைத்ததை நிறைவேற்றும் நாகசமாதி!
எப்பொழுதெல்லாம் நாம் நம்பிக்கையைப் பற்றி பேசுகின்றோமோ அப்பொழுதெல்லாம் தர்க நெறிகளை நாம் தவிர்த்திட வேண்டும்.அப்படித்தான் இந்தக் காதல் கதையும். ஆண் நாகமும், பெண் நாகமும் காதல் கொண்டு ஒன்றை ஒன்று துரத்திச் சென்ற போது பெண் நாகம் காரில் அடிபட்டு மரணமடைந்ததாகவும், அந்தத் துயர் தாங்க முடியாமல் ஆண் நாகமும் தரையில் தனது தலையை அடித்துக் கொண்டு மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படும் இந்தக் காதல் கதை.இது நடந்த இடம், குஜராத் மாநிலம் பரோடா நகருக்கு அருகே உள்ள மஞ்ஜால்புர் என்ற இடத்தில். நடந்த வருடம் 2002.அந்த நாகங்களுக்காக கட்டப்பட்ட அந்தக் கோயிலின் மேலாளர் ஸ்ரீஹர்மான் பாய் சோலங்கி நம்மிடம் இந்தக் கதையைக் கூறினார்.பல புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவிட்டு தங்களது காரில் திரும்பிக் கொண்டிருந்த ஒரு குடும்பம், 2002ம் ஆண்டு ஷிராவன பாரேக் மாதத்தில் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையைக் கடந்து கொண்டிருந்த நாகத்தின் மீது அவர்கள் சென்ற கார் மோதி விட்டது. அந்த நாகம் அங்கேயே இறந்துவிட்டது.அந்த நாகத்தைத் தொடர்ந்து வந்த ஆண் நாகமும் அந்த இடத்திலேயே தன்னை மாய்த்துக் கொண்டு விட்டது.