வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 25 மே 2015 (12:59 IST)

மனைவியின் அஸ்தியை மலசலகூடத்தில் கொட்டிய ஜப்பானிய கணவர்

ஜப்பானியர் ஒருவர், தனது மனைவியின் அஸ்தியை, டோக்கியோவில் உள்ள சூப்பர்மார்க்கட் ஒன்றில் உள்ள மலசலகூடத்தினுள் கொட்டி தண்ணீரடித்து வெளியேற்ற முயற்சித்ததாக தம்மிடம் வாக்குமூலளித்துள்ளதாக ஜப்பான் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த குறிப்பிட்ட பேரங்காடியின் கழிவறையில் இருந்து சாம்பல் மற்றும் மனித எலும்பு எச்சங்களை (தாடை மற்றும் கன்ன எலும்புகள் அடங்கலாக) ஏப்ரல் மாதக் கடைசியில் அரச அதிகாரிகள் கண்டெடுத்திருந்தனர். தனது மனைவியை தான் வெறுத்ததாக தெரிவித்த 68 வயதான அந்த கணவர், இயற்கை மரணம் அடைந்த தனது மனைவியை ,தகனம் செய்ததை அடுத்து, அவரது சாம்பல் உள்ளிட்ட எச்சங்களை உடனடியாக கொட்டிவிட்டதாக கூறினார்.
 
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே அஸ்தியை கரைக்க முடியும் என்பதால், சடலத்தை கைவிட்ட குற்றச்சாட்டின் கீழ், குறித்த நபருக்கு தண்டனை வழங்குவது குறித்து, அரச சட்டத்தரணிகள் ஆலோசித்து வருவதாக காவர்துறையினர் தெரிவித்தனர்.