1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 13 அக்டோபர் 2018 (11:43 IST)

வீட்டு மாடியில் வளர்க்கும் சிங்கங்களை வெளியேற்ற மறுக்கும் மனிதர்

மெக்ஸிகோவில் தன் வீட்டு மொட்டை மாடியில் வளர்க்கும் 3 சிங்கங்களை வெளியேற்ற ஒமர் ரோட்ரிகஸ் என்பவர் மறுத்து வருகிறார்.
 
சிங்கங்கள் முறையாக பார்த்துக் கொள்ளப்பட அவற்றை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஒமர் வசிக்கும் பகுதி, அதிக மக்கள் தொகை இருக்கும் இடம் என்பதால் சிங்கங்கள் கர்ஜிப்பது, சுற்றி இருப்பவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
 
அழிந்து வரும் வெள்ளை நிற சிங்கங்களை தன் பேரக் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று தான் விருப்பப்படுவதால் இவற்றை தாம் வைத்திருப்பதாக ஒமர் எல் யுனிவர்சல் என்ற நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
20 ஆண்டுகளாக இந்த சிங்கங்களை அவர் வளர்பதாகவும், இதற்கு முறையான ஆவணங்கள் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.