1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2017 (08:52 IST)

இன்று பொதுச்செயலாளர் ; நாளை முதலமைச்சர் : அமைச்சர்கள் நம்பிக்கை

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஜெ.வின் நீண்ட நாள் தோழி சசிகலா விரைவில் முதலமைச்சராக பதவியேற்பார் என அதிமுக அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


 

 
புது வருடத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் சேவூர் ராமச்ச்சந்திரன் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
 
அதன் பின் அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 
அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் அந்த பணியை திறம்பட செய்வார். அவரது தலைமையின் கீழ் அதிமுக மேலும் வளர்ச்சியடையும். அவரால் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும்.
 
அவரின் பேச்சு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. உண்மையான தொண்டர்கள் அவருக்கு துணையாக நிற்பார்கள். விரைவில் அவர் ஆட்சி பொறுப்பிற்கு வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். எனவே அவர் விரைவில் தமிழக முதல்வராக மக்கள் பணியாற்றுவார்” என அவர்கள் கூறினர்.