1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Updated : சனி, 22 ஏப்ரல் 2017 (06:27 IST)

பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணி தயார்: ஏழு பேர் கொண்ட குழு அமைப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலா குடும்பத்தவர்களை கட்சியில் இருந்து அதிரடியாக ஒதுக்கி வைத்த மூத்த அமைச்சர்கள், ஓபிஎஸ் அணியுடன் இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவை மீண்டும் உருவாக்கவுள்ளதாக கூறினர். இதனடிப்படையில் ஈபிஎஸ் அணியில் இருந்து பேச்சுவார்த்தைகாக  7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.



 


இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அணியும் பேச்சுவார்த்தைக்காக 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் கேபி முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், ஜேசிடி பிரபாகர், மாஃபா பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.

இந்த இரண்டு குழுவினர்களின் பேச்சுவார்த்தையை அடுத்து அடுத்தகட்டமான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.