இந்தியாவில் பெட்ரோலியம், இரசாயனம், பெட்ரோ ரசாயனம் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வருமாறு இந்தோனேசிய வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய உரங்கள்-இரசாயனத் துறை அமைச்சர் மு.க அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி அக்டோபர் மாதத்தில் 37.91 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அக்டோபரில் மொத்தம் 4,62,000 டன் உற்பத்தியாகி உள்ளது. சென்ற வருடம் அக்டோபரில் 3,35,000 டன் உற்பத்தியாகி இருந்தது.
தென் மேற்கு பருவமழை பல இடங்களில் பொய்த்து போனது. அதே நேரத்தில் பல பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பெய்து வெள்ளம் உண்டாக்கியது. இதனால் கரிப் பருவத்தில் நெல் உட்பட பல உணவு தானியங்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.