தொடர்புடைய செய்திகள்
- ஈரான் போர் ஓவர். கச்சா எண்ணெய் விலை சரிவு!.. சிலிண்டர் பிரச்சனை தீருமா?...
- பணிந்த அமெரிக்கா!.. கெத்து காட்டிய ஈரான்!.. முடிவுக்கு வந்த போர்!...
- இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
- எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
- இன்று இரவு யாரும் ரயிலில் பயணம் செய்ய வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை:
போர் நிறுத்தம் தற்காலிகமானது தான்.. ஈரான் ராணுவம் எப்போதும் தயாராக இருக்கும்: மொஜ்தபா கமேனி
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி , அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, ஈரானிய ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது போரின் முடிவு அல்ல என்றும், ஈரான் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த போர் தொடங்கியது. 39 நாட்கள் நீடித்த இந்த மோதலில் இருதரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது ஈரான் முன்வைத்துள்ள 10 அம்சத் திட்டத்தில் , ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கத்தை அங்கீகரிப்பது, பிராந்தியத்திலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது, ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்குவது மற்றும் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிபந்தனைகள் ஐநா பாதுகாப்பு சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போரை நிரந்தரமாக நிறுத்த ஈரான் முன்வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
