துர்காஷ்டமி ஏன் கொண்டாடப்படுகிறது?

துர்காஷ்டமி காரணம் மற்றும் அதன் சிறப்புகளை காண்க..!

Pixabay

துர்கை பிறந்தது அஷ்டமி திதியில் என்பதால் அம்பிகைக்கு மிகவும் உகந்த நவராத்திரியில் வருகின்ற அஷ்டமி நாள் துர்க்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் மிகவும் சக்தி வாய்ந்தது. துர்க்காஷ்டமி, மஹாநவமி, விஜயதசமி என்று இந்த நாட்கள் போற்றப்படுகின்றன.

வராஹ புராணத்தில், அஞ்ஞான ரூபமான மஹிஷன் என்ற அசுரன் அம்பிகை எனும் ஞானத்தினால் அழிக்கப்படுவதால் துர்காதேவி ஞானசக்தி என்று போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்ட-முண்டர்களையும், ரக்தபீஜன் எனும் அரக்கனையும் அடியோடு நாசம் செய்வதற்காக துர்கா தேவியின் நெற்றியிலிருந்து காளிதேவி தோன்றியதாகக் புராண கதைகள் சொல்கின்றன.

Pixabay

துர்காதேவியின் 64 யோகினிகளும், பிராம்மி, மாஹேஸ்வரி, மஹாலக்ஷ்மி வைஷ்ணவி, வாராஹி, நரசிம்ஹி, இந்த்ராணி, சாமுண்டா ஆகிய அஷ்ட சக்திகளும் ஒன்றாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

Pixabay

கொல்கத்தா போன்ற நகரங்களில் துர்க்காஷ்டமி நாளன்று மிக விசேஷமாக காளி பூஜை செய்யப்படுகிறது.

Pixabay