நலமுடன் வாழ வள்ளலார் அருளிய உணவுக் குறிப்புகள்..!

உணவுப்பொருட்களை எதை எப்படி சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பது குறித்து தீர்க்கமான குறிப்புகளை வள்ளலார் வழங்கியுள்ளார்.

Various Source

பசிக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்துக்குள் உண்ணத்தொடங்கிவிட வேண்டும். தள்ளிப் போட்டால் காலக்கிரமத்தில் அல்சர் வரும்.

பசி வராதவரை உண்ணாதீர். பசியில்லாத பொழுதில் உண்பது விஷமாகிறது

காய்கறி சமைக்கும்போது புளியும் மிளகாயும் எவ்வளவு குறைவாகச் சேர்க்கிறோமோ, அவ்வளவு நல்லது. மிளகு சேர்ப்பது சிறப்பு.

கடுகு தாளிப்பு இல்லாதிருந்தால் விசேஷம். தாளித்தே தீரவேண்டுமென்றால் பசுநெய்யில் தாளிக்கலாம்.

எதற்குத் தாளித்தாலும் இரண்டு பல் வெங்காயம், பூண்டு சேர்ப்பது நல்லது

Various Source

எருமைப்பால், எருமைத்தயிர், செம்மறி ஆட்டுப்பால், பருப்பு வகை, கடுகு அனைத்தையும் விலக்குக.

உண்டியில் எண்ணெய் குறைந்தால் உடலில் வியாதி குறையும்.