இங்கிலாந்து ராணிக்கு இறுதி மரியாதை
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி மரியாதை ஊர்வலம்
Twitter
இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.
அவரது உடல் ஸ்காட்லாந்து கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தியபின் மீண்டும் இங்கிலாந்து கொண்டு வரப்பட்டது.
பிற்பகல் 3.14 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
ராணியின் உடல் அவரது கணவர் பிலிப்பின் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராணியின் இறுதி சடங்குகள் மற்றும் ஊர்வலம் லண்டனில் உள்ள திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் திரையிடப்பட்டன.
Twitter
ராணியின் இறுதி ஊர்வலத்தை காண லண்டன் முழுவதும் 10 லட்சம் பேர் குவிந்திருந்தனர்.