மீண்டும் காதலா? சமந்தாவின் பதிவால் குழப்பம்!

சமந்தா விவாகரத்துக்கு பிறகு தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியான அவதூறு கருத்துகளால் கடுப்பாகினார்.

Instagram - Samantha

அமைதிக்காக கோவில்கள், இமயமலை, தியானம், சுற்றுப்பயணம் என்றெல்லாம் நேரத்தை செலவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து வந்தவர் அதையும் நிறுத்தினார்.

கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளம் பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை.

சமந்தாவுக்கு சருமத்தில் பாதிப்பு உள்ளதாகவும், இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தா மீண்டும் வலைத்தளம் பக்கம் வந்து இருக்கிறார்.

எப்போதும் தனியாக செல்ல முடியாது என்ற வாசகம் கொண்ட டி-ஷர்ட் அணிந்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து மீண்டும் காதலா? என ரசிகர்கள் சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.