என்ன பத்தி அவதூறா எழுதாதீங்க! பார்வதி நாயர் எச்சரிக்கை!

பிரபல தமிழ் நடிகையான பார்வதி நாயர் அவதூறு கருத்துகளுக்கு பதில்

Instagram

தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.

அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் அவரது வீட்டில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவை திருடு போயுள்ளன.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அவரது உதவியாளரான சுபாஷ் சந்திர போஸ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பல விதமாக தகவல்கள் பரவி வருகிறது.

Instagram

இந்நிலையில் தன்னை குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.