முட்ட கண்ணு முழி அழகில், குத்தி குத்தி கொன்னவளே: ஜோ பிறந்தநாள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜோதிகாவிற்கு இன்றுடன் 44 வயதாகிறது, இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறிய வருகின்றனர்.

Twitter

பாலிவுட் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ஜோதிகா, வாலி படத்தில் காமியோ ரோலில் தோன்றியிருந்தார்.

இதைத்தொடர்ந்து அஜித், சூர்யா, கமல், விஜய் உடன் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார்.

அறிமுகத்தின் போதே ஒரு வருடத்திற்கு ஆறு படங்கள் கொடுத்து அசத்தியிருந்தார் ஜோதிகா.

தமிழில் பல ஹிட் படங்களில் நடித்த ஜோதிகா, இறுதியாக 2009 ஆம் ஆண்டு சீதா கல்யாண படத்தில் நடித்திருந்தார்.

பூவெல்லாம் கேட்டுப்பாரிலிருந்து காக்க காக்க வரை கிட்டத்தட்ட ஏழு படங்களை தனது கணவர் சூர்யாவுடன் நடித்து முடித்து இருந்தார் ஜோதிகா.

இவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சினிமாவில் இருஃது பிரேக் எடுத்து பின்னர் 2015 ஆம் ஆண்டு சினிமா துறைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் ஜோதிகா.

நாயகியாக நடித்து வந்த இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி கலக்கி வருகிறார்.