ஓட்டலில் பிணமாக தொங்கிய பிரபல நடிகை

தமிழ், இந்தி படங்களில் நடித்த அகன்க்ஷா மோகன் தற்கொலை

Instagram

பிரபல மாடலாகவும், திரை நடிகையாகவும் இருந்து வந்தவர் அகன்க்ஷா மோகன்.

கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழில் ‘9 திருடர்கள்’ என்ற படத்திலும் நடித்துள்ள அகன்க்ஷா, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

அந்தேரி ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் நேற்று வெகு நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஓட்டலுக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

Instagram

அகன்ஷா மோகன் அங்குள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Instagram

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.