வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 1 அக்டோபர் 2016 (12:28 IST)

ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்ணீர்விட்ட டாப்ஸி!!

ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்ணீர்விட்ட டாப்ஸி!!

சமீபத்தில் வெளியான பிங்க் திரைப்படத்தை பார்த்த ரசிகை ஒருவரின் கடிதத்தை படித்த டாப்ஸியை கண்ணீர்விட வைத்துள்ளது. மேலும் இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


 
 
திரைப்படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெளிவரும் படங்கள் பல வெற்றி பெர்றாலும், அவற்றில் ஒரு சில படகள்தான் சமூகத்தின் அவலங்களை வெளிக்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்து சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான பிங்க் படம் வெளியான நாளில் இருந்தே படக்குழுவினர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.
 
இந்நிலையில் டுவிட்டர் மூலம் ஷ்ருஸ்தி மித்ரா என்ற பெண் டாப்ஸிக்கு எழுதிய கடிதம் அவரை கண்ணீர்விட வைத்துள்ளது. அந்த கடிதத்தில் டாப்ஸியின் கதாப்பாத்திரத்தையும், அவரது தைரியமான நடிப்பையும் சுட்டிக்காட்டியுள்ள ரசிகை பல பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட இது ஒரு உந்துதலாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். சமூகம் என்ன நினைக்கும் என்றும் கவலைப்படாமல் மனதில் தோன்றியதை பேசவேண்டும் என்று இந்தப்படம் மூலம் கற்றுக்கொண்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார். 

சமூகத்தில் பெண்களிடையே  ஒரு தைரியத்தை பிங்க் படத்தின் மூலமாக டாப்ஸி ஏற்படுத்திவிட்டார் என்று கூறியுள்ள அந்தப்பெண், சமூகத்தில் பெண்களிடையே மாற்றம் ஏற்படவும், மக்களிடத்தில் மாற்றம் ஏற்படவும் வெகுகாலம் ஆகும் என்றாலும், அதனை டாப்ஸி தொடங்கிவைத்தது பெருமையாக உள்ளது என்று புகழ்ந்து எழுதியுள்ளார்.