அனுராக் வெற்றியில் பங்கு கேட்கும் சசிகுமார்
அனுராக் வெற்றியில் பங்கு கேட்கும் சசிகுமார்
அனுராக் காஷ்யப் தனது கேங்ஸ் ஆஃப் வாஸேபர் திரைப்படத்தின் டைட்டிலில் சசிகுமார், அமீர், பாலா மூவரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.
இவர்களின் சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், நான் கடவுள் படங்கள்தான் தன்னை தனது வேரை பற்றி சிந்திக்க வைத்தது என அவர் பாராட்டியுமிருந்தார். இந்த மூவர் மட்டுமின்றி வெற்றிமாறன் உள்பட பல தமிழ் சினிமா பிரபலங்கள் அனுராக்கின் நட்பு வட்டத்தில் உள்ளனர்.
அனுராக் காஷ்யபின் உத்தா பஞ்சாப் படம் தணிக்கையின் சர்வாதிகார பிடியிலிருந்து மீண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்த சசிகுமார், அனுராக் காஷ்யபின் இந்த வெற்றி எங்களுக்கும் உரித்தானது என்று உரிமையுடன் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தணிக்கையின் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் அந்த வெற்றி உரித்தானதே.