சி.வி.குமாரின் தயாரிப்பு என்றால் தைரியமாக பார்க்கலாம் என்ற நம்பிக்கையை அவரின் கடந்தப் படங்கள் உருவாக்கியிருக்கின்றன. அந்த நம்பிக்கையை அதிகரிப்பதற்கான எல்லா தடயங்களும் தெகிடியில் உள்ளது. முந்தைய சில படங்களைப் போலவே குறும்படத்திலிருந்தே இப்படத்தின் இயக்குனர் ரமேஷை கண்டெடுத்திருக்கிறார் சி.வி.குமார். சினிமாக்காரர்களுக்குரிய உயர்வுநவிர்ச்சி இல்லாத ரமேஷின் பேச்சு படம் மீதான நம்பிக்கையை வலுவூட்டுகிறது.