ராஜ்கோட்டில் நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா இங்கிலாந்து பந்து வீச்சை ஆக்ரோஷமாக எதிர்கொண்டு 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்களை எடுத்துள்ளது. யுவ்ராஜ்சிங் 78 பந்துகளில் 16 பவுண்டரிகள் 6 சிக்சர் சகிதம் 138 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.