யோகம் என்னும் சொல்லுக்குப் பொதுவாக நாம் குறுகிய பொருளே கொள்கிறோம். அதை உபயோகிக்கும் போதும் பிறர் சொல்லக் கேட்கும் போதும் பதஞ்சலி முனிவரின் ராஜ யோகத்தையே, அதன் ஆசனம், பிராணாயாமம், தியானம், தாரணம், சமாதி ஆகியவற்றையே மனத்தில் கொண்டிருக்கிறோம். இவை ஒரு யோக முறையின் உட்கூறுகள் மட்டுமே.