திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel

ஆம்னி பேருந்தில் பதுக்கிய ரூ 50 லட்சம் பறிமுதல்

ஆம்னி பேருந்தில் பதுக்கிய ரூ 50 லட்சம் பறிமுதல்

மதுரை அருகே ஆம்னி பேருந்தில் பதுக்கப்பட்ட ரூ. 50 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 

 
மதுரை மாவட்டம், மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்போது, சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. அதை அப்போது நிறுத்தி அதில் திடீர் சோதனை செய்தர்.
 
இதில் மதுரையை சேர்ந்த ராதா என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 50 லட்சம் பணம் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.