திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 ஜனவரி 2022 (18:00 IST)

ஞாயிற்றுகிழமைகளில் ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யலாமா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் முழு நேர ஊரடங்கின்போது பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கும் நிலையில் ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறந்திருக்குமா என்ற கேள்வி பொது மக்கள் மனதில் எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து வரும் ஒன்பதாம் தேதி ரயில்வே நிலையங்களில் முன் பதிவு செய்யப்படாது என்றும் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன