வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 மே 2021 (20:13 IST)

தலைவர் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை: மநீமவில் இருந்து விலகிய மகேந்திரன்

தலைவர் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை:
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர்கள் இன்று திடீரென ராஜினாமா செய்ததா அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் உள்பட ஒருசில ராஜினாமா செய்ததை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி கூண்டோடு கலைக்கப்படுமா என்ற வதந்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் அவர்கள் கூறியதாவது: 
 
கட்சியில் இத்தனை பெரிய தோல்விக்கு பிறகும் தனது தோல்விக்கு பின்னரும் தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை, மாறிவிடுவார் என்று நம்பிக்கையும் இல்லை என்று கூறியுள்ளார். அவர் தெரிவித்த இந்த கருத்தால் மக்கள் நீதி மையம் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது