திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (10:28 IST)

சசிகலா புஷ்பாவால் பதவி இழந்தார் அமைச்சர் : அதிமுகவில் தொடரும் சர்ச்சை

சசிகலா புஷ்பாவால் பதவி இழந்தார் அமைச்சர் : அதிமுகவில் தொடரும் சர்ச்சை

சசிகலா புஷ்பா மீதும், அவரது கணவர், மகன் ஆகியோர் மீதும் வழக்குகள் பல பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் வேலை செய்த பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரும், அதனைத் தொடர்ந்து அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியும், தமிழகத்தில் தலைப்பு செய்தியானது.


 


இந்நிலையில், பானுமதியை, ஜான்சிராணியையும், சசிகலா புஷ்பா வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டதே, அமைச்சர் சண்முகநாதந்தான் என்று தெரியவந்தை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின், கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.சண்முகநாதன், நீக்கப்பட்டதை தொடர்ந்து, சசிகலா புஷ்பாவிற்கு நெருக்கமான சிலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.