வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்த காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 47 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பணிக்கு திரும்பினர். இதேபோல் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்பினர்.