சென்னை : இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை குறிப்பிட்ட காலவரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மக்கள் மன்றத்தில் விளக்கிட தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், பேரணி நடத்தப்படும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.