பிரதமர் வருகையால் சென்னையில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நாளை முதல் மூன்று நாட்கள் நடைபெறும் அயல்நாட்டுவாழ் இந்தியர்கள் மாநாட்டுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வருவதால் இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று புறநகர் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புறநகர் போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர், சென்னை வர்த்தக மையம் மற்றும் மதுரவாயல் பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 8, 9 ஆகிய தேதிகளில் வருகை தர இருப்பதால் வாகன ஓட்டிகள் புனித தோமையார் மலை பட்ரோடு மற்றும் மவுண்ட் பூந்தமல்லி சாலை ஆகியவைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பூந்தமல்லி மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து விமான நிலையம் செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் குமணன் சாவடி, மாங்காடு, குன்றத்தூர், பல்லாவரம் வழியாக சென்று ஜி.எஸ்.டி சாலையை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோன்று 8ஆம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், 9ஆம் தேதி பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கிண்டி மற்றும் அண்ணாசாலை பகுதிகளிலிருந்து போரூர் செல்லும் வாகன ஓட்டிகள் பட்ரோட்டை தவிர்த்து ஆற்காடு சாலை வழியாக பாதை மாற்றி செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோன்று 8ஆம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், 9ஆம் தேதி பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் வேலூர் வழியாக செல்லும் நெடுந்தூர பேருந்துகள் மதுரவாயல் சாலை வழியாகவும், மேலே சொன்ன ஊர்களிலிருந்து வரும் பேருந்துகள் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புறநகர் போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர், சென்னை வர்த்தக மையம் மற்றும் மதுரவாயல் பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 8, 9 ஆகிய தேதிகளில் வருகை தர இருப்பதால் வாகன ஓட்டிகள் புனித தோமையார் மலை பட்ரோடு மற்றும் மவுண்ட் பூந்தமல்லி சாலை ஆகியவைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பூந்தமல்லி மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து விமான நிலையம் செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் குமணன் சாவடி, மாங்காடு, குன்றத்தூர், பல்லாவரம் வழியாக சென்று ஜி.எஸ்.டி சாலையை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோன்று 8ஆம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், 9ஆம் தேதி பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கிண்டி மற்றும் அண்ணாசாலை பகுதிகளிலிருந்து போரூர் செல்லும் வாகன ஓட்டிகள் பட்ரோட்டை தவிர்த்து ஆற்காடு சாலை வழியாக பாதை மாற்றி செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோன்று 8ஆம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், 9ஆம் தேதி பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் வேலூர் வழியாக செல்லும் நெடுந்தூர பேருந்துகள் மதுரவாயல் சாலை வழியாகவும், மேலே சொன்ன ஊர்களிலிருந்து வரும் பேருந்துகள் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
