சென்னை: அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க உடனடியாக போரை நிறுத்துமாறு இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி, சென்னையில் நேற்று நடைபெற்ற நடிகர், நடிகைகள் உண்ணாவிரத போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.