1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

பொடா சட்டம் அவசியம் : இராம. கோபாலன!

பயங்கரவாதம் மாலேகான் பொடா இராம கோபாலன்
பயங்கரவாதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களைத் தண்டிக்க பொடா போன்ற கடுமையான சட்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து பயங்கரவாதம் என்ற ஒரு சொல்லை ஊடகங்கள் சமீபகாலமாக வெளியிடுகின்றன. எந்தவொரு புராணங்களும் பயங்கரவாதத்தைப் போதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்துக்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் போலி மதச்சார்பின்மைவாதிகள் இதுபோன்ற சொல்லை பயன்படுத்தி வருவதாக ராம. கோபாலன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
About Writer
Webdunia