சென்னை: சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் செய்துவரும் வன்முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.