புதுடெல்லி: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரிழந்த மராட்டிய பயங்கரவாத தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே சாவில் மர்மம் இருப்பதாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அந்துலே, பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.