மும்பை : தெற்கு மும்பையில் புதன்கிழமை இரவு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய், தாஜ், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுத் தாக்குதலில் பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) தலைவர் ஹேமந்த் கர்கரே, 2 உயர் காவல்துறை அதிகாரிகள் உள்பட 100 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.