ராணுவம், தேசிய பாதுகாப்பு படை மும்பை விரைவு!
தெற்கு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சமாளிக்க மும்பை காவல்துறையினருக்கு உதவியாக மத்திய அரசு ராணுவம், கடற்படை, தேசிய பாதுகாப்பு படையை மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளது.
தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 கமாண்டோக்கள் மும்பை விரைந்துள்ளனர். ராணுவம், விரைவு அதிரடிப்படையினரும் மும்பையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மஹாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். பாட்டீல் விரைவில் மும்பை வர உள்ளார்.
தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 கமாண்டோக்கள் மும்பை விரைந்துள்ளனர். ராணுவம், விரைவு அதிரடிப்படையினரும் மும்பையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மஹாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். பாட்டீல் விரைவில் மும்பை வர உள்ளார்.
