இந்திய விண்வெளி வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க, விஞ்ஞானிகள் பெருமை கொள்ளத்தக்க நாள் இது எனலாம். ஆம். கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்ட உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட சந்திரயான் - ஒன்று செயற்கைக்கோள் இந்திய நேரப்படி இன்று மாலை 5.04 மணியளவில் நிலவின் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.